அரியதமிழ் வளர்த்த அழகனே போற்றி
ஆணவம்தனைக் காயும் ஆதியே போற்றி
இன்ப வள்ளி நாயகனே இனியவனே போற்றி
ஈராறு புயங்கொண்ட ஈகையா போற்றி
உமையவள் பாலனாய் உலகையாள்பவனே போற்றி
ஊக்கமுடையார்க்கருளும் மயில் ஊர்தியாய் போற்றி
எண்திக்கும் ஆண்டருளும் என்னவனே போற்றி
ஏறுபுகழ் கொண்டவனே ஏந்தலே போற்றி
ஐங்கரன் தம்பியாய் ஐயம் தீர்ப்பவனே போற்றி
ஒளியினுருவாய் விளங்கும் ஓருவனே போற்றி
ஓங்கார புகழ் விளங்கவைத்த ஓங்காரநாத போற்றி
ஔவைக்கு அருள் புரிந்த ஔடதமே போற்றி போற்றி
சித்திரவேல் கையேந்தும் சித்திரவேலாயுதனே
உன் கமலபாதமதை சரணடைந்தோம் பாலகர் நாம்
சித்தி தந்து காத்தருள்வாய் எம்மை என்றும்.